ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரத்தில் அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரத்தில் அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்களால் தொடர் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது.
பின், மொத்த படமும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியாகி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைபர் குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இதுதொடர்பாக சிலரை அவர்கள் கைதும் செய்தனர்.
Advertisement
தற்போது இந்த விவகாரத்தில் அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் மீது திரைப்படத் தொகுப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக பிரதீப் ராகவ் நேரடியாக காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணம்.
மேலும் சங்கத்தின் விதிகளை மதிக்காமல் சங்க உறுப்பினர் அல்லாதோரை உதவியாளராக பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.