செய்திகள்

வழக்கம் போல் படப்பிடிப்புப் பணிகள் நடைபெறும்: விஷால்

DIN

பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் வழக்கம் போல படத் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்புப் பணிகள் நடைபெறும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தற்போது நிலவி வரும் பிரச்னைகள் குறித்த பெப்சி அமைப்பினரின் விளக்கம் கிடைத்தது. அதில் அந்த அமைப்பின் நிலைகள், நியாயங்கள் விளக்கப்பட்டிருந்தன.
தயாரிப்பாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து விருப்பம் தெரிவித்திருந்ததும் மகிழ்ச்சி அளித்தது. எனினும் ஆக.1}ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது வருத்தத்திற்குரியது.
இந்த நிலையில் வழக்கம் போல் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபடவும் உள்ளோம். எனவே எங்கள் படப்பிடிப்புக்கு எந்த விதத் தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என பெப்சி அமைப்பின் உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெப்சி அமைப்பினருடன் சேர்ந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம்தான். அதற்கான சூழல்களை பெப்சி அமைப்புதான் உருவாக்கித் தரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT