செய்திகள்

தயாரிப்பாளர் ஆனது ஏன்? நடிகர் விக்ரம் பிரபு பதில்

படத்தயாரிப்பில் உள்ள தவறுகளை என்னால் களைய முடியாது. எனவே இச்சூழலை மாற்றவே...

எழில்

புதுமுகம் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் நெருப்புடா படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். கதாநாயகி - நிக்கி கல்ராணி. 

இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகியுள்ள விக்ரம் பிரபு அதுகுறித்து கூறியதாவது: 

என்னுடைய முந்தையை படங்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்துகொண்டேன். படத்தயாரிப்பில் உள்ள தவறுகளை என்னால் களைய முடியாது. எனவே இச்சூழலை மாற்றவே நெருப்புடா படம் மூலமாகத் தயாரிப்பாளர் ஆகியுள்ளேன். 

என்னுடைய முந்தைய படங்களில் நிகழ்ந்த தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது. தயாரிப்பாளர் ஆகியுள்ளதால் படத்தயாரிப்பின் முழுப் பொறுப்பும் என் கையில் உள்ளது. நான் எண்ணியபடி என்னால் செய்துவிடமுடியும். தீயணைப்பு வீரராக இந்தப் படத்தில் நடிக்கிறேன். நிச்சயம் இது எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT