கடந்த சில நாள்களாக ஒரே பரபரப்பு. கோல்மால், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி, பிரபாஸ் - சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் என்று தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளிவந்துகொண்டிருந்தது.
இதையடுத்து இந்தச் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் ரோஹித் ஷெட்டி. அவர் கூறியதாவது: இது பொய்யான செய்தி. ஃபியர் ஃபேக்டரை (தொலைக்காட்சி நிகழ்ச்சி) இயக்குவதற்காகக் கடந்த 3 வாரங்களாக ஸ்பெயினில் உள்ளேன். இந்த வதந்தி எப்படிப் பரவியது எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் கோல்மால் அகைன் படம் தீபாவளி அன்று வெளிவருகிறது. அதற்கடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளார்.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு, தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் சாஹு படத்தில் நடித்துவருகிறார் பிரபாஸ்.