செய்திகள்

தமிழ்நாட்டின் யாஷ் சோப்ரா இயக்குனர் ஏ.எல்.விஜய்: வனமகன் நாயகி சாயேஷா!

சரோஜினி

இப்படிச் சொன்னது யார் தெரியுமா? இயக்குனர் விஜயின் வெளிவரவிருக்கும் புது திரைப்படமான ‘வனமகன்’ நாயகி சாயேஷா. படத்தைப் பற்றியும் தமிழில் தனது அறிமுகம் குறித்தும் பேசுகையில் நடிகை சாயேஷா இப்படிக் கூறினார். பாலிவுட்டில் இயக்குனர் யாஷ் சோப்ரா போலவே கோலிவுட்டில் இயக்குனர் ஏ.எல்.விஜய், தனது படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் உட்பட பிற பெண்களை கெளரவமாக நடத்தியதைக் கண்டதும் தனக்கு இப்படிச் சொல்லத் தோன்றியதாக சாயேஷா தெரிவித்துள்ளார்.

மேலும் பழம்பெரும் பாலிவுட் சூப்பர் ஹீரோவான திலீப் குமாரின் பேத்தியான சாயேஷா... தனக்கு அந்த உறவு முறை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்றும், நானும், என் அம்மாவும் மட்டுமே இப்போது எங்களது உலகத்தில் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். அதோடு ஒரு புகழ்பெற்ற பிரபலத்தின் உறவினர் என்பது சினிமாவில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இங்கே  கடின உழைப்பிருந்தால் மட்டுமே நீடிக்க முடியும் என்று தான் நம்புவதாகக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT