புதிய சகாப்தம் ஆரம்பம்: பவர் பாண்டி பாடல்கள் பற்றி தனுஷ்!
இசையின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்று தனுஷ் இப்பாடல்களை வர்ணித்துள்ளார்.
தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் பவர் பாண்டி படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு. இப்படத்தின் கதைக்களம், அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் ஒருவரைப் பற்றிய கதையாகும்.
இந்தப் படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளன. பவர் பாண்டி படப் பாடல்கள், இசையின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என்று தனுஷ் இப்பாடல்களை வர்ணித்துள்ளார்.
Advertisement