செய்திகள்

ரஜினியும் ராஜமெளலியும் இணைந்தால்..: கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும் பிரபல இயக்குநர்!

எழில்

பாகுபலி 2 படம் மெகா ஹிட். இந்திய சினிமாவின் நெ.1 இயக்குநர் ஆகிவிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அவர் ரஜினியை வைத்து படம் இயக்கினால் அது எப்படி இருக்கும்?

இப்படி யோசித்துள்ளீர்களா? 

பிரேமம் புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது:

இயக்குநர் ராஜமெளலி, ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவார் என நம்புகிறேன். அப்படி நடந்தால், அது உலக அளவிலான அவதார் பட வசூல் இரண்டாம் இடத்துக்குச் சென்றுவிடும் என்று கூறியுள்ளார். 

இயக்குநர் ராஜமெளலி இதற்கு முன்பு தமிழில் படம் இயக்குவது குறித்து கூறியிருந்தார். அப்போது தான் தமிழில் படம் இயக்குவதா இருந்தால் அது ரஜினியுடன்தான். கையில் கதை எதுவும் இல்லாவிட்டாலும் அவருடன் பணிபுரியவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் என்று கூறியிருந்தார்.

பாகுபலி படம் பார்த்த ரஜினி, ராஜமெளலிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ராஜமெளலியும் பதில் அளித்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது,  ரஜினி - ராஜமெளலி கூட்டணி வருங்காலத்தில் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT