செய்திகள்

ஜெர்மனியில் பிரதமரைச் சந்தித்த நடிகை பிரியங்கா சோப்ரா!

எழில்

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதன் முதல்கட்டமாக ஜெர்மனி தலைநகர் பெர்லினை திங்கள்கிழமை சென்றடைந்தார். இந்தியா - ஜெர்மனி இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான இந்தப் பயணம், இரு நாட்டு நல்லுறவில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என்று ஜெர்மனி சென்றடைவதற்கு முன்னர் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்நிலையில் பெர்லினில் நடிகை பிரியங்கா சோப்ரா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்த பிரியங்கா, பிரதமர் பெர்லினில் இருக்கும்போது நானும் அங்கு வந்திருப்பது தற்செயல். தொடர் பணிகளுக்கு இடையில் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்த பிரதமருக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தாதாசாகேப் பால்கே விருது விரைவில் வழங்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் அவர் பிரதமரைச் சந்தித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT