முகப்பு
செய்திகள்

சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! துல்கர் சல்மான் நெகிழ்ச்சி!

மலையாளத்தில் 2012-ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.

செய்திகள்

சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! துல்கர் சல்மான் நெகிழ்ச்சி!

மலையாளத்தில் 2012-ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

மலையாளத்தில் 2012-ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். அதன் பின் 2014-ம் ஆண்டு வெளியான‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

உஸ்தாத் ஹோட்டல், சார்லி போன்ற வெற்றிப் படங்கள் மலையாளத்தில் அவரை முன்னணி ஹீரோவாக்கியது. அதன் பின் தமிழிலும் இயக்குனர் மணி ரத்னத்தின் ‘ஓகே கண்மணி’யில் அவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது, சமீபத்தில் வெளியான ‘சோலோ’, தமிழில் சரிவரக் கவனம் பெறவில்லை என்றாலும் மலையாளத்தில் அவருக்கு நல்ல பெயரை எடுத்துத் தந்துள்ளது.

துல்கர் பிறந்தது கொச்சியில் என்றாலும், பள்ளிப் படிப்பை சென்னையில்தான் முடித்தார். எனவே, அவருக்கு சென்னை ரொம்பவே  ஸ்பெஷல். படப்பிடிப்புக்காக சென்னை வரும் சமயங்களில் மிகவும் சந்தோஷமாக உணருவதாகக் கூறிய துல்கர்,  'சென்னை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். இங்கே இன்னும் சொந்த வீடு இருக்கிறது. என் மாமனார் மாமியார் சென்னையில் தான் வசிக்கின்றனர்.

மலையாளப் படங்களின் ஷூட்டிங்கிற்காக நிறைய நேரம் கேரளாவிலேயே செலவிட வேண்டியிருப்பதால், சென்னையை இப்போதெல்லாம் மிஸ் செய்கிறேன். ஷூட்டிங் இல்லையென்றால் சென்னைக்கே இடம்பெயர்ந்து வந்து விடுவேன்’ என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →