சென்னை சோழிங்கநல்லூரில் சரவணா ஸ்டோர்ஸின் புதிய ஃபேமிலி ஷாப்பிங் மால் இன்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் பிக் பாஸ் மூலம் அதிகக் கவனம் பெற்றுள்ள நடிகை ஓவியா கலந்துகொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் ஓவியாவை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஓவியா பேசியபோது: எனக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. என் மீது இத்தனை ரசிகர்கள் அன்பு செலுத்தும்போது நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்கவேண்டும்? ரசிகர்களின் இதுபோன்ற அன்பைப் பார்ப்பது இந்தக் காலத்தில் கஷ்டம். என் குணத்துக்காக என் மீது அன்பைச் செலுத்துகிறார்கள். இதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். பிக் பாஸ் 100-வது நாள் நிகழ்ச்சியில் நான் பங்கேற்பேன். அப்போது ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பாடிய கொக்கு நெட்ட கொக்கு நெட்ட பாடலை, ரசிகர்களுக்காகப் பாடிக் காண்பித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஓவியாவின் ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.