திமுகவுடன் கைகோர்க்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தவெக கோரிக்கை!
திமுகவுடன் சில அதிகாரிகள் கைகோர்த்துள்ளதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
திமுகவுடன் சில அதிகாரிகள் கைகோர்த்துள்ளதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளருடன் நிர்மல் குமார் பேசுகையில், “திமுகவுடன் கைகோர்த்துள்ள சில ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்-களை இடமாற்றம் செய்யுமாறு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம்.
கடைசி நிமிடத்தில் எங்கள் தலைவரின் பிரசாரத் திட்டம் மறுக்கப்பட்டு, அனுமதிகோரி விண்ணப்பிக்கும் இடங்களில் எந்தக் காரணமுமின்றி நிராகரிக்கப்படுகிறது. ஆகையால், நாங்கள் வேறொரு இடமாற்றத்தைக் கோரியுள்ளோம்.
Advertisement
Advertisement
பிகாரில் 600 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால், இங்கு அதுபோன்று யாரும் இடமாற்றம் செய்யப்படாததை கவனித்ததாக தேர்தல் அலுவலர் கூறினார். தேவைப்பட்டால், முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
பெரம்பூர் பிரசாரத்துக்கு மறுக்கப்பட்டதையடுத்து, மீண்டும் விண்ணப்பித்துள்ளோம். என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்“ என்று தெரிவித்தார்.
TVK asked the Election Commission to transfer of the IAS and IPS officers who is hand with DMK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.