முகப்பு
செய்திகள்

இது மட்டும் சரியாக அமைந்து விட்டால் சினிமாவில் நஷ்டமே ஏற்படாது: அறிமுக இயக்குநர் பேச்சு!

தமிழ் சினிமாவில்  1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில்900 பேரிடமாவது இப்படத்தின் கதை குறித்துப் பேசியிருப்பேன்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

அறிமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் உருவாகி வரும் படம் - நான் செய்த குறும்பு. சந்திரன், அஞ்சு குரியன் போன்றோர் நடிக்கிறார்கள். ஓர் ஆண் பிரசவத்தை எதிர்கொள்வது போன்ற இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளன. 

இப்படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் மகா விஷ்ணு பேசியதாவது:

ஸ்டாண்ட் அப் காமடி, அசத்தப்போவது யாரு என்று டிவி மீடியாவில், சன் டிவியில் 9 ஆண்டுகள் இருந்தேன். சினிமாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவில்  1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில்
900 பேரிடமாவது இப்படத்தின் கதை குறித்துப் பேசியிருப்பேன்.  ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவதில்லை . காரணம் தப்பான கதை , தப்பான படக் குழு , தப்பான மேனேஜர் என்று அமைந்ததால் தான். ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை. எனக்கு அப்படி அமைந்துள்ளது. 'நான் செய்த குறும்பு ' ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம்! இது பட்ஜெட் படம்தான், ஆனால் அதில் நம்ப முடியாத அளவுக்கு பிரமாண்டம் இருக்கும், தரம் இருக்கும் என்று பேசியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments