செய்திகள்

கோலமாவு கோகிலா படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன் என்று சொன்ன விஐபி இவர்தான்!

சினேகா

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் கோலமாவு கோகிலா வெளியானது.

இப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ப்ரோமோஷனுக்காக வெளியான 'எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு' என்ற பாடல்  கோலமாவு கோகிலா படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. கோலமாவு கோகிலாவாக நயன்தாரா வாழ்ந்திருக்கிறார் எனலாம். அப்படியொரு ரகளையான பாத்திரம். முதற்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு சிக்கலான வியூகங்களுக்குள் சாமர்த்தியமாக இவர் பயணிக்கும் விதம் அபாரம். நயன்தாரா என்றல்ல, ஒவ்வொரு பாத்திரங்களுக்குமே பிரத்யேகமான குணாதியசத்தையும் தோரணையையும் தர இயக்குநர் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நகைச்சுவையை அதகளப்படுத்தியுள்ள இயக்குநருக்கு பலத்த பாராட்டுக்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை போனில் அழைத்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 'சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்' என்று நெல்சன் திலீப்குமாரிடம் படம் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT