முகப்பு
செய்திகள்

பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரித்விகா!

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ள இரண்டாவது படம் - இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ள இரண்டாவது படம் - இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. இதற்கு முன்பு, அந்நிறுவனத்தின் முதல் படமாக வெளிவந்து பலத்த பாராட்டுகளைப் பெற்றது, பரியேறும் பெருமாள். 

ப. இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ரித்விகாவும் உறுதி செய்துள்ளார். பா. இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி படங்களில் ரித்விகா துணை வேடங்களில் நடித்திருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.