செய்திகள்

இயக்குநர் கார்த்திக் நரேன் மூன்றாவது படத்துக்குத் தயார்!

எழில்

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன்.

அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்துள்ளார். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரியா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். 2018 பிப்ரவரியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது படம் இன்னும் வெளிவராத நிலையில் 3-வது படத்துக்குத் தயாராகிவிட்டார் கார்த்திக் நரேன். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

எனது மூன்றாவது படத்துக்குக் கையெழுத்திட்டுள்ளேன். இந்தக் கதை என் மனத்துக்கு நெருக்கமானது. விவரங்கள் விரைவில் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT