செய்திகள்

எமி ஜாக்சனுக்கு என்ன நேர்ந்தது?

சினேகா

பிரபல மாடலாக இருந்து லண்டனிலிருந்து கோலிவுட்டில் நடிக்க வந்தவர் எமி ஜாக்சன். மதராஸ பட்டினம், தாண்டவம், தங்க மகன், தெறி, ஐ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனத்தை கொள்ளையடித்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து '2.O' படத்தில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் தற்போது கன்னட படம் ஒன்றிலும், இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி சீரியலான `சூப்பர் கேர்ள்' என்ற சீரியலில் நடித்து வருகிறார். 

மறைந்த நடிகை ஸ்மிதா பட்டீலின் மகன் நடிகர் பிரதீக் பாபர் தான் எமியின் முன்னாள் காதலர். தற்போது பிரதீக் பாபருக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் இயக்குநர் சானியா சாகரைத் திருமணம் செய்யவுள்ளதாக பாம்பே டைம்ஸ் பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளார் பிரதீக். மேலும் தனது இன்ஸ்டாகிராமிலும் தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து Holy snappp!.. that just happened! என்று பதிவிட்டுள்ளார்.

எமியும் பிரதீக்கும் கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேல் காதலித்தனர். ஒருவர் பெயரை மற்றவர்களின் கையில் பச்சை குத்திக் கொள்ளும் அளவிற்கு இருவரின் நெருக்கமும் பாலிவுட்டில் பிரபலமாக இருந்தனர்.

விரைவில் திருமணம் என்ற நிலையில் திடீரென்று இந்த ஜோடி பிரிந்தது. அதற்குக் காரணமாக பிரதீக்குடன் நேரம் செலவழிக்க இயலாத நிலையில் அவர் பிஸியாக இருந்துள்ளார். எமியுடனான பிரிவுக்குப் பிறகு பிரதீக் மனம் உடைந்த நிலையில் இருந்தார். ஒரு பத்திரிகை பேட்டியில் அந்தக் காலகட்டத்தை கடக்க மிகவும் கஷ்டப்பட்டதாகவும், போதை பழக்கத்துக்கு உள்ளாகி அதன் பின் தான் மீண்டதாகவும் மனம் திறந்து கூறினார்.

எமி தரப்பிலிருந்து இதற்கு பதிலாக நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்திருந்தாலும் பிரிவுக்கு பின் பிரதீக்கை சந்திக்கவில்லை என்று கூறியிருந்தார்.

தற்போது பிரதீக்கின் திருமண செய்தி எமி ஜாக்ஸனுக்கு மன வருத்தம் அளித்தாலும் பழைய விஷயங்களிலிருந்து மீண்டு வருவது தான் புத்திசாலித்தனம் என்று கருதுகிறார். குடியரசு தின வாழ்த்துக்களை தனது டிவிட்டரில் பதிவிட்ட எமி அதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT