செய்திகள்

இவ்ளோ படங்களில் நடிக்கவிருக்கிறாரா சிம்பு?

சினேகா

பலவிதமான சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்ட சிம்பு, அண்மையில் சமூக நலனுடன் பொறுப்பாக பேசியதில் மக்களிடையே பாராட்டு பெற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது திரையுலக வாழ்க்கையில் சில ஏற்றங்கள் நிகழவிருக்கிறது. தற்போது வெளிநாட்டில் உள்ள சிம்பு, விரைவில் தாயகம் திரும்புகிறார். 

செக்கச் சிவந்த வானம் படத்தில் அவருடைய காட்சிகள் படமாக்கம் செய்து முடிக்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதியில் அப்படத்திற்கு டப்பிங் பேசவிருக்கிறார். ஓவியா நடிப்பில் உருவாகிவரும் 90 மில்லி எனும் படத்தின் இசையமைப்பாளர் சிம்புதான். அதையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படி அடுக்கடுக்கான வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர், ஒரு மாதம் ஓய்வு எடுக்கவுள்ளாராம் சிம்பு. அதன் பின்னர், முழு சுழற்சியில் தனது வேலைகளைத் தொடங்கவிருக்கிறார் என்கிறது அவரது வட்டாரம்.

அண்மையில் இரண்டு புது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று காலம் சென்ற நாகி ரெட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் நடிக்க சிம்பு ஆர்வமாக உள்ளார். காரணம் அப்பட நிறுவனம் இதற்கு முன்னால் தயாரித்த படங்களான அஜித்தின் வீரம், விஜயின் பைரவா ஆகியவை வெற்றி பெற்றுள்ளன. சிம்புவின் இந்தப் புதிய படத்தின் பெயர், பிற நடிகர்கள் என எதுவும் உறுதியாக நிலையில் சிம்பு நடிப்பது மட்டும் உறுதியாகியிருப்பது அவரது மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணம்.

இதனை அடுத்து சிம்பு மீண்டும் இயக்குநர் அவதாரமும் எடுக்கவுள்ளார். நீண்ட நாட்களாக அவரது கனவுப் படமாக இருக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் சிம்பு. 'விண்ணைத் தாண்டி வருவேன்' என்ற தலைப்பில் உருவாகவிருக்கும் அப்படம், கெளதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றார் சிம்பு. இப்படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். 

மேற்சொன்ன படங்களைத் தவிர சிம்பு கலைப்புலி தாணு தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். அடுத்த சில மாதங்கள் சிம்புவின் கடிகார முட்கள் தறிகெட்டு ஓடவிருக்கிறது, அந்தளவுக்கு ஆக்டர் பிஸி என்கிறது கோலிவுட் வட்டாரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT