செய்திகள்

ஆர்யா பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை கோரிய வழக்கு: நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

எழில்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலமாகத் தனக்கான துணையைத் தேர்வு செய்ய களமிறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 பெண்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யவுள்ளார். ஆர்யாவின் இந்த முயற்சிக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஆர்யா பங்குபெறும் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜானகி அம்மாள் தன்னுடைய மனுவில், பெண்களின் மாண்பைக் கெடுக்கும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கவேண்டும். கலர்ஸ் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி, நடிகர் ஆர்யா, நடிகை சங்கீதா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர், திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT