பாகிஸ்தானில் திரையிடப்பட்ட பாகுபலி!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ளது...
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சர்வதேசத் திரைப்பட விழாவில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ளது.
மார்ச் 29 முதல் கராச்சியில் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று பாகுபலி படம் திரையிப்பட்டுள்ளது. இதற்காக கராச்சி சென்றுள்ளார் இயக்குநர் ராஜமெளலி. இத்தகவலை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த வருடம் வெளியான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மகத்தான சாதனைகளைப் படைத்தது.