செய்திகள்

இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் இயக்குநர் ஆக முடியாது! இப்படி சொன்னவர் யார்?

ராக்கி

பிக் பி என்று பாலிவுட் உலகில் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் தன் 49 வருட திரை வாழ்க்கையில் தனக்கு ஒரே ஒரு வீக்னஸ் இருந்ததாக தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன் மற்றும் ரிஷிகபூர் நடிப்பில் அண்மையில் வெளியான `102 நாட் அவுட்’ எனும் படம் திரை ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. பிரபல ஹாலிவுட் திரை விமரிசகரான ரோஜர் எபர்ட் இந்தப் படத்துக்கு 3 க்கு 2.5 ஸ்டார் கொடுத்து படத்தைப் பாராட்டியுள்ளார்.

102 நாட் அவுட் படத்துக்காக ரிஷிகபூருடன் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளார் அமிதாப் பச்சன். இதில் 102 வயதுடைய தந்தையாக அமிதாப்பும்,  75 வயது மகனாக ரிஷிகபூரும் சிறப்பாக நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நிகழும் பாசப் போராடங்களை மிக அழகாக இத்திரைப்படத்தில் சித்தரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் வெற்றி விழா அண்மையில் மும்பையில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் உமேஷ் சுக்லா, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் ஒருவர் அமிதாப் பச்சனிடம் திரைப்படங்கள் இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலாக அமிதாப், ‘எனக்கு டைரக்‌ஷன் தெரியாது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் இயக்குநர் ஆக முடியாது. ஒவ்வொரு முறையும் இயக்குநர்கள் வைக்கும் கேமரா ஆங்கிள் பற்றி என் மனதில் பல்வேறு கேள்விகள் எழும்’ என்று வெளிப்படையாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT