சசிகுமார் - மடோனா நடிக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படப்பிடிப்பு தொடங்கியது!
சசிகுமாரை வைத்து ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்...
‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களைத் தயாரித்த இந்தர்குமாரின் ‘REDHAN’ நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் - ‘கொம்புவச்ச சிங்கம்டா’
சசிகுமாரை வைத்து ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
1990-1994 காலக்கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன் போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - நைனன் தாமஸ். ஒளிப்பதிவு - ஏகாம்பரம்.
காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கிளாப் அடித்து தொடங்கிவைத்துள்ளார். பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.