முகப்பு
செய்திகள்

கஜா புயல்: லைகா ரூ. 1 கோடி நிதியுதவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது லைகா பட நிறுவனம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது லைகா பட நிறுவனம்.

கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. கஜா புயலில் இருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்நிலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூபாய் 1 கோடியே ஒரு லட்சம் தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக லைகா பட நிறுவனம் அளித்துள்ளது.

Advertisement

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது. நவம்பர் 29 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments