செக்கச் சிவந்த வானம்! என்னுடைய 23 ஆண்டு கால தவம் பலித்தது! நடிகர் அருண் விஜய் பேட்டி (விடியோ)
செக்க சிவந்த வானம் படத்தில் அத்தனை பெரிய நட்சத்திரப் பட்டாளத்திலும் கவனம் பெற்று ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய்.
செக்க சிவந்த வானம் படத்தில் அத்தனை பெரிய நட்சத்திரப் பட்டாளத்திலும் கவனம் பெற்று ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். பெரியவர் சேனாதிபதியின் (பிரகாஷ் ராஜ்) இரண்டாவது மகன் தியாகுவாக நடித்த அவர் பல இடங்களில் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக தனது தந்தையின் இருக்கையில் அமர்ந்து மிதப்புடன் அவர் பார்க்கும் பார்வையும், தம்பியுடன் கப்பலில் பேசும் பேச்சுக்களும், சிறையில் மனைவியைப் பார்க்கச் சென்ற இடத்தில் மனக் கலக்கத்துடன் திரும்புவதும் என பல இடங்களில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அருண் விஜய்.
இந்தப் படம் வெளியான சமயத்தில் சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பனுக்கு அருன் விஜய் அளித்த நேர்காணல் இது. தனது 23 ஆண்டு கால திரை வாழ்க்கை குறித்தும், இயக்குநர் மணி ரத்னத்தின் படத்தில் ஒப்பந்தமான மகிழ்ச்சியான தருணம் பற்றியும், தனது அடுத்த படம் என்னவென்பது வரை பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.
செக்கச் சிவந்த வானம் படத்தில் தன்னுடைய காரெக்டரை எப்படி உள்வாங்கினார் என்பதைத் தொடர்ந்து சக நடிகர்களுடன் எப்படி ஒத்திசைவுடன் நடித்தார் என்பதையெல்லாம் மனம் திறந்து இந்த பேட்டியில் கூறியுள்ளார் அருண் விஜய்.