செய்திகள்

‘பிக் பாஸ்’ மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு

எழில்

தொழிலதிபர் ஜோ மைக்கேல் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் ஜோ மைக்கேல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கும் நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பணப்பிரச்னை உள்ளது. தற்போது என் மீதும் என் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளார். இதனால் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT