செய்திகள்

பகவத் கீதை குறித்து அவதூறாகப் பேசவில்லை: விஜய் சேதுபதி விளக்கம்

சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் குலைக்குமாறு...

எழில்

பகவக் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இதுபோன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம் என்று விஜய் சேதுபதி பேசியதாக சமூகவலைத்தளங்களில் மீம் ஒன்று வெளியானது. செல்போன் பறிப்பு விழிப்புணர்வு குறித்த விஜய் சேதுபதியின் கருத்து ஒன்று தனியார் தொலைக்காட்சியின் ட்விட்டர் கணக்கில் போஸ்டராக வெளியிடப்பட்டது. அதுதான், விஜய் சேதுபதி பகவத் கீதையைத் தவறாகப் பேசியது போல மாற்றப்பட்டு சமூகவலைத்தளங்களில் மீம்களாகப் பரப்பப்பட்டன.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. அவர் கூறியதாவது: 

என் அன்பிற்குரிய மக்களுக்கு, பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனித நூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT