தோல்வியடைந்த படம்: மீதிச் சம்பளத்தைப் பெற மறுத்த சாய் பல்லவி!
படம் தோல்வியடைந்தாலும் சாய் பல்லவியின் மீதிச் சம்பளத்தைத் தர அவர் முயன்றுள்ளார். ஆனால்...
ஷ்ரவானந்த், சாய் பல்லவி நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான தெலுங்குப் படம் - Padi Padi Leche Manasu. ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
ரூ. 22 கோடிக்கு வியாபாரமான இந்தப் படம் ரூ. 8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக அறியப்படுகிறது. படக் கதாநாயகிக்கு ஒப்பந்தத்தில் சொன்ன சம்பளத்தில் ஒரு பகுதியை முதலில் கொடுத்த தயாரிப்பாளர், மீதமுள்ள ரூ. 40 லட்சத்தை பட வெளியீட்டுக்குப் பிறகு தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். இந்நிலையில் படம் தோல்வியடைந்தாலும் சாய் பல்லவியின் மீதிச் சம்பளத்தைத் தர அவர் முயன்றுள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் தன்னால் இந்தத் தொகையைப் பெற்றுகொள்ள முடியாது. வசூலில் நஷ்டம் ஏற்பட்டத்தில் தானும் பொறுப்பேற்பதாக சாய் பல்லவி தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். இதனால் இந்தப் பணத்தை சாய் பல்லவியின் பெற்றோரிடம் தர தயாரிப்பாளர் முயன்றுள்ளார். அவர்களும் அதை வாங்க மறுத்துள்ளார்கள்.
சாய் பல்லவியின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.