செய்திகள்

உங்கள் மகிழ்ச்சிக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன்: நடிகை சமந்தா உருக்கம்

ஒவ்வொரு நாளும் உங்களுடைய மகிழ்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்...

எழில்

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது 33-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.  

இந்நிலையில் நடிகை சமந்தா, தன் காதல் கணவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததாவது:

என்னுடைய சைதன்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் உங்களுடைய மகிழ்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொரு நாளும் சிறந்த குணங்களை வெளிப்படுத்தும் உங்களைக் கண்டு பெருமைப்படுகிறேன். நாம் வலுவான கூட்டணியாக உள்ளோம். ஐ லவ் யூ டார்லிங் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை 2017 அக்டோபரில் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறினார்கள். இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

SCROLL FOR NEXT