செய்திகள்

சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச்சிலை (படங்கள்)

எழில்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56-வது பிறந்த நாளையொட்டி,சிங்கப்பூரில் உள்ள மேடம் டூஸாட் மெழுகுச்சிலை மியூசியத்தில் அவரது சிலை இடம் பெறும் எனக் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஸ்ரீதேவியின் திரையுலகச் சாதனையைக் கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் மேடம் டூஸாட் மியூசியத்தில் அவரது மெழுகுச்சிலை இடம் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கலந்துகொண்டார்கள். மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தின் வடிவம் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம், துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT