முகப்பு
செய்திகள்

பட அறிவிப்பை வெளியிடலாமா?: ரசிகர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட நடிகர் விஷ்ணு விஷால்

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டு...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி முடிவெடுத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

2009-ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். 2018-ல் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் தான் அவர் கடைசியாக நடித்து வெளிவந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

தன்னுடைய புதிய படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை இன்று வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் புதிய பட அறிவிப்பை வெளியிடுவது குறித்து விஷ்ணு விஷாலுக்குக் குழப்பம் ஏற்பட்டது.

தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை ஏப்ரல் 11 அன்று வெளியிடலாமா என ட்விட்டரில் ரசிகர்களிடம் கருத்து கேட்டார் நடிகர் விஷ்ணு விஷால். ரசிகர்கள் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகக் கூறினார்.

இந்நிலையில் ட்விட்டரில் அவருடைய கேள்விக்கு 68% ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதாவது திட்டமிட்டபடி ஏப்ரல் 11 அன்று அறிவிப்பை வெளியிட ஆதரவு தெரிவித்தார்கள். 32% ரசிகர்கள் மட்டும் இச்சமயத்தில் வேண்டாம், கரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்த பிறகு அறிவியுங்கள் என வாக்களித்திருந்தார்கள்.

இதையடுத்து தன்னுடைய புதிய படத் தலைப்பு குறித்த அறிவிப்பை இன்று மாலை 4.07 மணிக்கு வெளியிடவுள்ளார் விஷ்ணு விஷால்.

முழு கட்டுரையைப் படிக்க →