செய்திகள்

ட்விட்டருக்கு வந்தார் ராவணன்

DIN

புகழ்பெற்ற ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி தனக்கான ட்விட்டர் கணக்கை ஆரம்பித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ராமானந்த் சாகா் இயக்கிய ராமாயணத் தொடரை தூா்தா்ஷனில் ஒளிபரப்ப வேண்டும் என்று சமூகவலைத்தளங்கள் வாயிலாக பலா் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, ராமாயணம் தொடா், மாா்ச் 28-ஆம் தேதி முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராமாயணம் தொடா், முதன் முதலில் தூா்தா்ஷனில் கடந்த 1987-ஆம் ஆண்டில் ஒளிபரப்பானது.

ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் சீதையாக தீபிகா சிகாலியாவும் ராவணனாக அரவிந்த் திரிவேதியும் அனுமனாக தாரா சிங்கும் நடித்து இந்தியா முழுக்கப் புகழ் பெற்றார்கள். ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் ஒளிபரப்பாகும்போது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கும்.

இந்நிலையில் ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி தனக்கான ட்விட்டர் கணக்கை ஆரம்பித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து #RavanonTwitter என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பிரபலப்படுத்தினார்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT