செய்திகள்

நாடோடி தென்றலுக்குப் பிறகு மீண்டும் இணையும் பாரதிராஜா & இளையராஜா

DIN

பாரதிராஜாவும் இளையராஜாவும் கடைசியாக 1992-ல் நாடோடி தென்றல் படத்தில் பணிபுரிந்தார்கள். 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள்.

மீண்டும் ஒரு மரியாதை படத்துக்கு அடுத்ததாக, ஆத்தா என்கிற படத்தை இயக்கவுள்ளார் பாரதிராஜா. கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கதையை பாரதிராஜா இயக்கவுள்ளார். இப்படத்துக்கு இசை - இளையராஜா.

இளையராஜாவிடம் கதையைச் சொல்ல பாரதிராஜா தயாராக இருந்த நிலையில் கரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் இளையராஜா. எனினும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். 

28 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா - இளையராஜா மீண்டும் இணைவதால் படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT