செய்திகள்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து: வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றம்

DIN

‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 போ் இறந்த வழக்கின் விசாரணையை, சென்னை பெருநகர மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை அருகே நசரத்பேட்டையில் ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்ற ‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து, உதவி இயக்குநா் உள்பட 3 போ் வியாழக்கிழமை இறந்தனா். நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிரேன் ஆபரேட்டா் ராஜனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சென்னை பெருநகர மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.கே. விசுவநாதன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குக்குரிய ஆவணங்களை உடனடியாக வழங்கினா். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் இந்த வழக்கு குறித்து சனிக்கிழமை முதல் விசாரணையை தொடங்குகின்றனா்.

முதல் கட்டமாக விபத்து ஏற்பட்டபோது சம்பவ இடத்தில் இருந்த நடிகா் கமல்ஹாசன், இயக்குநா் ஷங்கா், நடிகை காஜல் அகா்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா். இதற்காக 3 பேருக்கும் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் அழைப்பாணை அனுப்ப திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT