செய்திகள்

தேசிய விருது பெற்ற இயக்குநரை விரைவில் மணக்கிறார் நடிகை அனுஷ்கா?

தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எழில்

பாகுபலி நட்சத்திரம் பிரபாஸைக் காதலிக்கிறார் என்று முதலில் செய்திகள் வெளியாகின. பிறகு கிரிக்கெட் வீரரைக் காதலிக்கிறார் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குநரை நடிகை அனுஷ்கா காதல் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை ஊடகங்களில் வெளியான தகவலின்படி, இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடியைத் திருமணம் செய்ய அனுஷ்கா திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது. 

பிரகாஷ் கோவலமுடி 2004-ல் இயக்கிய பொம்மலடா படம், சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இவர், மூத்த தெலுங்கு இயக்குநர் ராகவேந்திர ராவின் மகன். இஞ்சி இடுப்பழகி (தெலுங்கில் சைஸ் ஜீரோ) படப்பிடிப்பின்போதுதான் அனுஷ்கா - பிரகாஷ் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கனிகா தில்லானை 2014-ல் திருமணம் செய்துள்ளார் பிரகாஷ். எனினும் 3 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிந்து வாழ்வதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அனுஷ்கா - பிரகாஷ் இடையிலான காதல் திருமணம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT