முகப்பு
செய்திகள்

2 வாரத்தில் ரூ. 10 கோடி வசூல் சாதனை: திரெளபதி பட இயக்குநர் பெருமிதம்

சமீபத்தில் வெளியான திரெளபதி படம் முதல் 2 வாரங்களில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி. ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 மார்ச், 2020 at 5:39 PM
பகிர்:

ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கியுள்ள படம் - திரெளபதி. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடகக் காதல் குறித்து படத்தின் மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியது. 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான திரெளபதி படம் முதல் 2 வாரங்களில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி. ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர்கிறது... இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சித் திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.