முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பு ரத்தால் அவதிப்படும் திரைப்பட ஊழியர்களின் நலனுக்காக நாகார்ஜுனா ரூ. 1 கோடி நிதியுதவி

திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பிரபல நடிகர் நாகார்ஜுனா ரூ. 1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Updated On : 28 மார்ச், 2020 at 4:34 PM
பகிர்:

திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பிரபல நடிகர் நாகார்ஜுனா ரூ. 1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 27,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் படப்பிடிப்பு ரத்து காரணமாக அவதிப்படும் திரைப்படத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காகப் பிரபல நடிகர் நாகார்ஜுனா ரூ. 1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்த் திரையுலகில் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்துவருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.