பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார்.
செவிலியர் படிப்பில் பட்டம் பெற்றுள்ள ஷிகா, சஞ்சய் மிஷ்ராவுடன் இணைந்து காஞ்ச்லி என்கிற படத்தில் நடித்துள்ளார். நடிகையாகிவிட்டதால் அவர் பட்டம் பெற்ற பிறகு நர்ஸாக எங்கும் பணியாற்றவில்லை. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் தன்னார்வலராக இணைந்துள்ளார். அங்கு அவர் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார்.
ஒரு நர்ஸாகவும் நடிகையாகவும் நாட்டு மக்களுக்குச் சேவையாற்ற நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அனைவரும் வீட்டினுள் இருந்து அரசுக்கு உதவுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.