முகப்பு
செய்திகள்

மீண்டும் தொடங்கியது எஸ்.எஸ். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு: விடியோ வெளியீடு!

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் ஆர்ஆர்ஆர் படம் 2021 ஜனவரி 8 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாதாப்பூரில் உள்ள ராஜமெளலி மகனின் ஹோட்டலில் படக்குழுவினர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். கரோனா பாதுகாப்பு வளையத்தை மீறி வெளி ஆள்களைச் சந்திக்க படக்குழுவினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒருவருக்கு மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →