முகப்பு
செய்திகள்

திருச்சியில் எஃப்.எம்.ஜி.ஈ. மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)

இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான எஃப்.எம்.ஜி.ஈ. தேர்வை எழுதியுள்ளார் பிரபல நடிகை சாய் பல்லவி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான எஃப்.எம்.ஜி.ஈ. தேர்வை எழுதியுள்ளார் பிரபல நடிகை சாய் பல்லவி.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் எஃப்.எம்.ஜி.ஈ. (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். ரஷியா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் இத்தேர்வைக் கட்டாயம் எழுத வேண்டும். அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது. 

2016-ல் ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் பயின்ற பிரபல நடிகை சாய் பல்லவி, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற எஃப்.எம்.ஜி.ஈ. தேர்வில் பங்கேற்றார். அப்போது, சக தேர்வர்கள், சாய் பல்லவியை அடையாளம் கண்டு அவரிடம் சிறிது நேரம் பேசி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள். இப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →