மும்பைக்கு வருகிறேன், முடிந்தால் தடுத்துப் பார்: நடிகை கங்கனா சவால்
விமான நிலையம் வந்த பிறகு நேரத்தைக் குறிப்பிடுகிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்...
மும்பைக்கு வர வேண்டாம் என்று சொன்ன சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு நடிகை கங்கனா ரணாவத் சவால் விடுத்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் கங்கனா கூறியதாவது:
மும்பைக்கு நான் வரக்கூடாது எனப் பலர் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே இந்த வாரம் செப்டம்பர் 9 அன்று மும்பைக்கு வருவதாக உள்ளேன். மும்பை விமான நிலையம் வந்த பிறகு நேரத்தைக் குறிப்பிடுகிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பார் என்று கூறியுள்ளார்.
மும்பைக் காவல்துறைக்கு எதிராக கங்கனா ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இதை எதிர்த்த சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத், மும்பைக் காவல்துறையை அவமதிக்கும் செயல் இது. அவரை மும்பைக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார். இதையடுத்து தனது மும்பைப் பயணத் திட்டத்தை கங்கனா அறிவித்துள்ளார்.
கங்கனா தனது சொந்த ஊரான மணாலியில் தற்போது வசித்து வருகிறார்.