இயக்குநர் அட்லி தயாரிக்கும் படம்: புதிய தகவல்!
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2017-ல் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார் அட்லி. இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாகத் தயாரிக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுவதாகக் கூறியுள்ளார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியிடப்படுகிறது.
சமீபத்தில், கரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார் அட்லி. கரோனா நிவாரணமாக இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 5 லட்சமும் பெப்சி தொழிலாளர்கள் அமைப்பு ரூ. 5 லட்சமும் வழங்கியுள்ளார்.
Advertisement