சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை: வைரமுத்துவின் 'மதுக்கவிதை '
‘சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை’ என்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: ‘சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை’ என்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மது என்பது -
Advertisement
அரசுக்கு வரவு;
அருந்துவோர் செலவு.
மனைவிக்குச் சக்களத்தி;
மானத்தின் சத்ரு.
சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.
ஆனால்,
என்ன பண்ணும் என் தமிழ்
மதுக்கடைகளின்
நீண்ட வரிசையால்
நிராகரிக்கப்படும்போது?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.