செய்திகள்

'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் இவர்களா ? - வெளியான தகவல்

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நான்கு வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் பங்குபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஜூலி, அனிதா சம்பத், ஷாரிக், அரந்தாங்கி நிஷா, சம்யுக்தா ஆகியோர் கடுமையான முயற்சியினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிலையில் இறுதிப் போட்டி படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த இறுதிப்போட்டியில் இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஓவியா, லாஸ்லியா, ரம்யா பாண்டியன், சாக்ஸி அகர்வால் அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ஒரே  போட்டியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஓவியாவும், லாஸ்லியாவும் இணைந்து தோன்றுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் இறுதி நிகழ்ச்சியில் வெற்றியாளர்களாக ஷாரிக் மற்றும் அனிதாவும் அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT