செய்திகள்

வேட்டை தொடருமா ? துப்பாக்கியுடன் கிளம்பிய சிம்பு: வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்

DIN

சிம்புவுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 'மாநாடு' படத்தின் வெற்றி அமைந்துள்ளது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு', கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்', கௌதம் கார்த்துக்குடன் இணைந்து 'பத்து தல' உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். 

இதில் கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது 'மாநாடு' படத்தின் வெளியீடு காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை நடிகர் சிம்பு துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படப்பிடிப்பு ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார். 

'வெந்து தணிந்தது காடு' படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ராதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT