துவக்கத்தில் பெரிய சுவாரசியம் இல்லாமல் இருந்த பிக்பாஸ் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இன்னும் பிக்பாஸ் முடிய 2 வாரங்களே உள்ளது.
இந்த நிலையில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே என்ற போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெல்பவர்கள் ஃபைனலுக்கு நேரடியாக செல்லலாம். இதனையடுத்து இன்று வெளியான ப்ரமோவில் அமீர் மற்றும் சிபி ஆகியோர் கடுமையாக விளையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | புத்தாண்டு வாழ்த்து சொன்ன இளையராஜா - ''இளமை இதோ இதோ...''
இதில் சிபி மட்டும் தடுமாறுகிறார். அமீர் உறுதியாக நிற்கிறார். இந்த நிலையில் அமீர் டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் அமீர் வென்று நேரடியாக ஃபைனலுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.