செய்திகள்

திரையரங்கில் வெளியாவதில் சிக்கல்: பிப். 28-ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏலே படம்!

DIN

புதிய திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ஏலே படம் திரையரங்குகளில் வெளியாகாமல் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூவரசம் பீப்பி என்கிற படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்ததாக சில்லுக் கருப்பட்டி என்கிற படத்தை இயக்கி அதிக கவனம் பெற்றார்.

ஹலிதா தற்போது இயக்கியுள்ள படம் - ஏலே. இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் 2019-ம் ஆண்டு மே 3 அன்று தொடங்கியது. 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். வால்வாட்சர் மற்றும் வொய்நாட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலே படத்தைத் தயாரித்துள்ளார்கள்.  

சமுத்திரக்கனி, மணிகண்டன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அருள்தேவ். பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் ஓடிடியிலும் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து இனிமேல் சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 30 நாள்களுக்குப் பிறகும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 50 நாள்களுக்குப் பிறகும் தான் ஓடிடிடியில் வெளியாக வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கடிதம் அளிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்துள்ளார்கள்.

இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ஏலே படம் திரையரங்குகளில் வெளியாகாமல் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆச்சர்யமான புதிய விதிகளால் படத்தைத்  திரையரங்குக்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏலே படம் பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பகல் 3 மணிக்கு நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT