எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ்
எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது
எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இது குறித்து நிலையன்ச் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் இன்று(மார்ச் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய எருபொருள்களின் தடையில்லா விநியோகத்தை உறுதிசெய்ய ரிலையன்ஸ் நிறுவனம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கிறது.
அதன்படி, எங்களுடைய சுத்திகரிப்பு நிலையங்களில் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம். முக்கியமாக, ஜாம்நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மையத்திலும் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary