செய்திகள்

''சிம்புவால் தான் இப்படி நடந்தது'' - 'மாநாடு' பிரபலம் டிவீட்

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க, ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இருந்து 'மெகரசைலா' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் படப்படிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டிக்கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மாநாடு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 85 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு 68 நாட்களில் முடிவடைந்தது. அதற்கு சிம்பு அளித்த ஒத்துழைப்பு தான் காரணம். இந்த வாய்ப்பை வழங்கிய வெங்கட் பிரபுவிற்கும், என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT