தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் கரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கர்.