கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் இயக்குநர் பாரதிராஜா (படங்கள்)
தேனியில் உள்ள தனது இல்லத்தில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்...
செய்திகள்கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் இயக்குநர் பாரதிராஜா (படங்கள்)
தேனியில் உள்ள தனது இல்லத்தில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்...
இயக்குநர் பாரதிராஜா, கரோனா தடுப்பூசியை தேனியில் செலுத்திக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் நேற்று 1 லட்சத்து 96 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரை இந்தியாவில் 19 கோடியே 85 லட்சத்துத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, தேனியில் உள்ள தனது இல்லத்தில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். இதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.