பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை நிறைவு செய்தது பற்றி...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்தார்.
தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள்(ஏப். 23) நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை 6 மணி வரை பிரசாரத்திற்கு அனுமதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் சேலத்தில் தான் போட்டியிடும் எடப்பாடி உள்பட தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
இன்று காலை சேலத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் பாமக தலைவர் அன்புமணியும் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி மயிலாப்பூரில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரசாரத்தைத் தொடங்கிய இபிஎஸ், இன்று சேலத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.