முகப்பு
தமிழ்நாடு

பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை நிறைவு செய்தது பற்றி...

Updated On : 21 ஏப்ரல் 2026, 2:02 pm IST
எடப்பாடி பழனிசாமி - X/ EPS
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்தார்.

தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள்(ஏப். 23) நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை 6 மணி வரை பிரசாரத்திற்கு அனுமதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் சேலத்தில் தான் போட்டியிடும் எடப்பாடி உள்பட தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

இன்று காலை சேலத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் பாமக தலைவர் அன்புமணியும் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி மயிலாப்பூரில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரசாரத்தைத் தொடங்கிய இபிஎஸ், இன்று சேலத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

summary

Edappadi K. Palaniswami Concludes Campaign in salem

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments